Monday, April 13, 2009

காங்கிரஸ் க்கு ஓட்டு போட விரும்பாத திமுகவினர் என்ன செய்ய

எனது நண்பர் டாக்டர் கலைஞரின் ஏன் திமுகவின் கண்முடித்தனமான பற்று உள்ளவர். ஆனால் இலங்கை பிரச்சனையில் திமுகவின் , கலைஞரின் செயல் பாட்டில் நெறைய அதிருப்தியை வந்து விட்டது . ஆனால் பொது இடத்தில் விட்டு கொடுக்காமல் பேசினாலும் , நண்பர்களின் உள்வட்டத்தில் பேசும் போது ரொம்ப வருத்தப்பட்டு பேசுவார். சிமானை கைது செய்தது மற்றும் சில விசயங்களில் திமுகவின் மீது கோபம் உண்டு. ஆனால் ஆட்சியினை காப்பாற்ற தலைவருக்கு வேறு வழி இல்லை என்று சமாதானம் சொல்லி கொள்வார். ஆனால் உயிரே போனாலும் காங்கிரஸ் க்கு வாக்கு அளிக்க மாட்டேன் என்றார்.துர் அதிர்ஷ்டமாக அவர் வசிக்கும் தொகுதியில் திமுக போட்டியிட வில்லை , என்ன செய்வது . என்று தலை பிய்த்து கொண்டு இருக்கிறார் ஓட்டு போடாமல் இருந்தால் அந்தம்மாவின் கூட்டணிக்கு சாதகமா போய் விடும் , ஓட்டு மற்ற கட்சிக்கு போட்டாலும் அந்த அம்மாவுக்கு சாதகம் தான். இந்த நிலையில் நிறைய பேருக்கு இருக்கும் . நீங்கள் என்ன செய்ய போகுறீர்கள்

Thursday, April 9, 2009

அவர்களோடு எங்களையும்

மரணமடைந்த தாயிடம்
பால் அருந்தும் குழந்தை
கருவிலேயே குண்டுசிதறல்களில்
கொள்ளப்படும் மனித கருக்கள்

இறந்தவர்க்கு இரங்க
நேரமில்லை
காயம்பட்டவரின் உயிர்
காக்க அவசரமாய் அகற்றப்படும்
உடல்கள்

குழியில் வைக்கப்பட்ட
பிணத்தின் மீது
மண் எடுத்து போட
தெம்பிலாத கைகள்

தொடர் பட்டினியால்
வற்றி போன மார்புகள்
பால்பவுடர்க்கு
அல்லாடும் தமிழ்த்தாய்கள்

தள்ளு வண்டி கடைகள் போல்
அடிக்கடி இடம் மாறும்
மருத்துவமனைகள்
பாதுகாப்பு பகுதிகள்

நச்சு வாய்வு செலுத்தி
மயக்கதில்லேயே சுட்டு
கொல்லப்பட்ட தமிழ் பிண வரிசைகள்

இதையெல்லாம்
பார்த்தும் கேட்டும்
மண் மாதிரி தினசரி வாழ்வை
எத்தனை நாட்கள்
நடை பிணமாய் நடத்துவது
அவர்களோடு எங்களையும்
o o o o o o o

சோனியாவிற்கு குறியா? தமிழீழ விடுதலைப் புலிகள் மறுப்பு!

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்று இந்தியாவின் உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை, இந்திய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சிஎன்என்-ஐபிஎன் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது.
for additional details ://manimalar.wordpress.com

Wednesday, April 8, 2009

கத்திரிக்காய்குழம்பு

எங்க அப்பா அவசரத்துக்கு செய்யும் கத்திரிக்காய்குழம்பு

 

நல்ல குண்டு கத்தரிக்காய்களை எடுத்து அடுப்பில் சுடவேண்டும். சுடும் பொழுது சில சமயம் கத்திரிக்காய் வெடிக்க கூடும் . பயப்படவேண்டாம். சுட்ட உடன் கத்தரிக்காயின் மேல்  தோலை உரித்துவிடவும் , பின்னர் வெங்காயம் , பச்சை மிளகாய் தேவையான அளவு அரிந்து வைத்து கொள்ளவும் , கொஞ்சம் உப்பு எல்லாவற்றையும் ஒரு சட்டியில் போட்டு கடைந்து எடுத்தால் கத்திரிக்காய் குழம்பு தயார். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் . மனைவி ஊரில் இல்லாத நாட்களில் ரொம்ப சவுகரியமாக இருக்கும் இந்த குழம்பு.

Saturday, April 4, 2009

மனசாட்சி



மழை கழுவிவிட்ட தார்சாலை

நடு வெள்ளை கோடாக

மைஇருட்டு மேனியில்

வெள்ளை கோடு போட்ட

வால்ஆட்டி குருவி ஒன்னு

ஒவ்வொரு முறையும்

சீட்டி அடித்து அதனை தொடர்நது

தன்னையே பாராட்டி இறக்கை தட்டும்

மனசாட்சி விரோதமில்லாமல்

நடப்பதாக  என்னை நானே

முதுகில் தட்டி கொள்வது போல

 

மேகம் குடை பிடித்து

ஒளிமழைத்துளி தடுத்து

மப்பும் மநதாரமான காலையில்

மனசாட்சி கேட்டது

தொடர்வண்டி படுக்கை வேண்டி

பணம் கொடுத்தது என்ன நியாயம்

 

மேக ஒட்டையின் ஊடே

புகுந்த ஒளிகற்றை போல

நடப்பு வாழ்க்கையில்

வாங்காமல் இருக்கலாம்

கொடுக்காமல் முடியாது

எதார்த்தம் சொன்னது

 

மேகம் முழுவதும் மூடி

மழை பெய்ய ஆரம்பித்தது

எல்லாருக்கும் பொதுவாக

Thursday, April 2, 2009

திடீரென டயட் இருப்பவரா நீங்கள் ?

அமெரிக்க நாட்டின் ஒலிம்பியா மாகான புனித பீட்டர் மருத்துவ மனையில் கடந்த ஆண்டு நவம்பெர் மாதம் ஒரு பெண் நடக்க முடியாமல் மூச்சு விட கஷ்டப்பட்டு . தலை லேசாக உள்ள நிலையில் வந்து சேர்ந்தார். அவரை விசாரித்த போது, இவ்வாறு உடல் நலம் கெடுவதற்கு முந்தைய முன்று நாட்களாக டயட் இருக்க ஆரம்பித்து உள்ளார். காலையில் 225 கிராம் திராட்சை பழம் காலை சாப்பட்டு முறையினை கடைப்பிடித்து உள்ளார். அது வரை பழங்களை உணவாக அவ்வளவாக உணவில் சேர்த்து கொள்ளாதவர் அவர். மேற்படி நாளில் அவர் உட்கொண்ட கருத்தடை மாத்திரை மற்றும் திடீர் திராட்சை உணவு இரண்டு சேர்ந்து அவரது காலில் இரத்த ஓட்டத்தை தடை செய்து விட்டது . அதனால் அவரால் நடக்க முடியவில்லை. அவருக்கு அடைப்பு நீக்கு வெடிப்பு முறையில் மேலும் stent வைத்து அவரது காலில் உள்ள நரம்பினை விரைவாக்கி கிகிற்சை கொடுத்தனர்.
அவர் மூன்று நாட்கள் சாப்பிட்ட திராட்சை அதிகபடியாக oestrogen சுரந்து அவரின் சமநிலையினை சீர்குலைத்து விட்டது மேலும் திராட்சை oestrogen யை உடைக்கும் என்ச்ய்ம் களின் நடவட்டிக்கை தடுத்து விட்டது.
எனவே திவிர டயட் எதிர்பாரா விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் http://news.bbc.co.uk/1/hi/health/7978418.stm

பிரபாகரன் மகன் சார்லஸ் காயம்

சார்லஸ் அந்தோனி சண்டையில் கடுமையாக காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் சார்லஸ் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
for addl details http://manimalar.wordpress.com

Friday, March 27, 2009

ஈழம் நேற்றும் இன்றும்

இந்த துயரம் சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும்

Wednesday, March 18, 2009

கரையை தொட வந்த அலை

கரையை தொட வந்த அலை


பதிவு அலுவலகத்தில்
மனம் முடிக்க உனக்காக
காத்திருந்தேன்


கரையை தொட வந்த அலை
தூண்டில் வலையில் சிக்கி
கரை தொடதது போல்
எங்கோ நீ முடக்கபட்டாய்


குளத்து நீர்அலையில் சேர்ந்தாடும்
வெங்காய தாமரைகள் குளம்நீர்
குடித்து குளம் வற்ற செய்வது போல்
நீ எங்கே அடைபட்டிருக்கிறாய்
எனும் நித்தய நினைவுகள்
என் இரத்தத்தை உறிஞ்சும்


கவலைபடாதே கண்ணே
கதிரவன் கதிர் கொண்டு
உலகமெங்கும் உன்னை
தேடுவேன்
இருட்டு அறையிலும்
சிறுஒட்டை வழி புகுந்து
என் பீம்பம் காட்டுவேன்
ஒளி கற்றையாய்
உன் வாழ்வில் ஒளி சேர்ப்பேன்

Tuesday, March 17, 2009

2010 ஆசியவிளையாட்டு போட்டி

சீனாவின் குங்க்டோங் பகுதியில் 2010 யில் நடை பெறவிர்க்கின்ற ஆசியன்ம விளையாட்டு போட்டிக்கு விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் போது சீனா விளையாட்டு வீரர்கள் தங்களது உண்மையான வயதினை தெரிவிக்காமல் வயதினை விளையாட்டில் சக போட்டியாளரை விட அதிக பயன் பெற வேண்டி வயதினை குறைத்து தெரிவிகின்றனர். எலும்பு வயது பரிசோதனைக்கு விளையாட்டு வீரகளை உட்படுத்தி பார்த்ததில் இது தெரிய வந்து உள்ளது. 13000 விளையாட்டு வீரர்களை இப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது 3000 பேர் அவர்கள் பதிவு செய்த வயதினை விட அதிக வயதினர் . ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னடிச்சில் தங்க பதக்கம் பெற்ற பலர் குறைந்த பட்ச வயதான 16 வயதினை விட குறைவான வயதினர் என தெரிய வந்து உள்ளது; ஆவாள்கள இதனை பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது கடை பிடிப்பார்கள் .எப்பவே இதை செய்ய ஆரம்பித்த விட்ட ஆவாள்கள் பெரிய கைககாரர்கள் தான் http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/7945832.stm

Thursday, March 12, 2009

சென்னையில் வினோதமான மணமுறிவு

சென்னையில் வினோதமான மணமுறிவு.சென்னையில் பதினேழு வயது உள்ள ஒருவாலிபன் காவல் நிலையத்தை அணுகி எனது விருப்பம் இல்லாமல் பதினாலு வயது தனது உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும் அவனுக்கு அப்பெண்டுடன் வாழ பிடிக்க வில்லை என்றும் எனவே மணமுறிவு செய்ய உதவ வேண்டும் என்று காவல் துறை இடம் கேட்டு கொண்டு உள்ளான்.பொதுவாக பால்ய திருமணம் தொடர்பாக பெண்கள் தான் மணமுறிவு கேட்பார்கள் ஆனால் இங்கு ஆண் கேட்கிறார். முதலில் இத் திருமணம் செல்லாது என நினைக்கிறேன். இரண்டு மாதம் வாழ்ந்து விட்டதால் திருமணம் செல்லுமா, கட்டயப்படுத்தி இருந்தால் இது அநியாயம் தான்

Tuesday, March 10, 2009

உத்தரபிரதேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

உத்தரபிரதேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

 

உத்தரபிரதேசத்தில் வெற்றியை யார் தீர்மானிக்கு போகிறார்கள்

சமாஜ்வாடி கட்சி  27 விழுக்காடு வாக்கு வங்கியும் பகுஜன் சமாஜ்கட்சி  24 விழுக்காடு வாக்கு வங்கியும் பாஜக  14 விழுக்காடு வாக்கு வங்கியும் காங்கிரஸ் கட்சி 13 விழுக்காடு வாக்கு வங்கியும் உள்ளன. இதனால் கூட்டனி அமைப்பது மிகவும் அவசியம். எல்லாரும் தனிதனியாக போட்டி போட்டால் பகுஜன் அதிக இடம் பெற வாய்ப்பு இருந்தாலும் சமாஜ்வாடி கட்சி அதே அளவு வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே காங்கரஸ் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தால் உபியில் முன்று பங்கு இடங்களை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

Monday, March 9, 2009

சீமான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

சீமான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

 தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும்  சீமான் அவர்கள் சிதம்பரம் அல்லது தங்கபாலுவை எதிர்த்து போட்டி இட வைக்கலாம் என் ஆனந்தவிகடன் செய்தி வந்துள்ளது.

            

தொடர்ந்த பின் விபரங்களுக்கு

http://manimalar.wordpress.com

இலங்கை தமிழர்க்கு தனிநாடு. ஜெ

இலங்கை தமிழர்க்கு தனிநாடு. ஜெ
இலங்கை வாழ தமிழர்க்கு இலங்கை அரசியல் அமைப்புக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழ்நாடு அமைக்க பட வேண்டும் என்று உண்ணாநிலை மேடையில் தெரிவித்தார் . இலங்கை தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் இப்பிரட்சனிக்கு தனி நாடு தான் சரியான தீர்வு என்றும் தெரிவித்து உள்ளார் .ஆனால் ஆயுதம் போராட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்து உள்ளார் . இந்திய ராணுவம் சிங்கள ரானுவதிருக்கு உதவி மற்றும் பயிற்சி ஆயுதம் வழங்குவதாக வந்த செய்தியினை மத்திய அரசு மறுக்க வில்லை . பயிற்சி ஆயுதம் வழங்குவதை அதிமுக எதிர்க்கிறது. ரூபாய் ஐந்து லட்சம் இலங்கை தமிழர் நிதி யாக உண்டியலில் போட்டு ஆரம்பித்து வைத்தார். இவ் உண்ணாநிலை போராட்டம் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றாது

Sunday, March 8, 2009

மண முறிவு தொடர்பான உச்ச நீதி மன்ற தீர்ப்பு

மண முறிவு தொடர்பான உச்ச நீதி மன்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பு ஒன்றில் இனி வாழ தனது இணையுடன் வாழ வியலாது எனும் காரணம் காட்டி மண முறிவு பெற வியலாது என தீர்ப்பு வழங்கியது . இதற்க்கு முன் வழங்கிய தீர்ப்பில் பிடிக்கவில்லை இணையுடன் இனி வாழ இயலாது என்றால் மண முறிவு பெற்று கொள்ள வியலும் என்று தீர்ப்புகள் வந்ததாக ஞாபகம் . ஆனால் இப்போது ஹிந்து சட்டப்படி பிரிவு 13 படி வாழ்வியலா சூழ்நிலையினை காட்டி மணமுறிவு பெற இயலாது என்றும இதற்க்கு மேற்படி சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவந்தால் தான் முடியும் என்றும் வழக்கு அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள் (நன்றி டைம்ஸ் ஒப் இந்தியா 9/3/09). மண முறிவு சட்டப்படி பெறுவது நாளது. ஆனால் பிடிக்காவிட்டால் மணமுறிவு செய்வது ரொம்ப கஷ்டம் என்றால் கட்டை பஞ்சாயத் காரர்களுக்கு கொண்டாட்டம். அவர்கள் மேற்படி மண முறிவுகளை தீர்த்து விடுதல் எனும் முறையில் செய்வார்கள். சில சமயங்களில்காவல் துறைகூட இதை செய்கிறார்கள். பிடிக்காவிட்டால் பிரிந்து போக வழி எளிதா வேண்டும். கட்டை பஞ்சாயத்துகளில் மண முறிவு செய்து கொண்டால் பின்னர் சொத்து தகராறு வர அதிக வாய்ப்பு உண்டு. எனவே தாமதம் என்றாலும் சட்டப்படி மண முறிவு பெறுவது தான் சரி. ஆனால் ரொம்ப நாளுக்கு வேண்டாதவர்களை சேர்ந்து வாழ சொல்வது அநியயாம். எனவே உடன் மண முறிவு பெற சட்ட திருத்தம் செய அரசு முன் வரவேண்டும்.

Saturday, March 7, 2009

ஐப்பில் போட்டிகளை தள்ளி வைக்க காங்கிரஸ் அரசு கேட்

ஐப்பில் போட்டிகளை தள்ளி வைக்க காங்கிரஸ் அரசு கேட்டு கொண்டது. பற்றி யாகூவில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில்

வீரர்களை பாதுகாக்க முடியாது என்பதால் ஐப்பில் போட்டிகளை தள்ளி வைக்கிறோம் என்றால் அது இந்தியாவை பாதுகாப்பு இல்லாத நாடு என்று பறைசாற்றாதா என்றும்
தொடர்ந்து படிக்க

Friday, March 6, 2009

இருள் கவியும் முன்

இருள் கவியும் முன் மாலை

கார்மேகம்  கரும்போர்வை போற்ற

கடற்கூந்தலில் வெள்ளை பூச்சரமாய்

அலைகள் கரைமோதி பூ தூவும் நேரம்

 

மணல் அளக்கும் உன் கைபற்றி

மணமுடித்தல்  பேச

கரை தொட்டு திரும்பும் அலைகளாய்

என் கையிலிருந்து நழுவியது

விடுபட்டது உன் கை

 

பூஇதழ் உதிரும் சத்தத்திலும் சன்னமாய்

யோசிக்க  நேரம் வேண்டுமென்றாயே

அவ்வமயம் நமது காதல்

மரத்தில் கரையான் ஏறியது

அரித்து முடிக்குமுன்

உன் சிந்தனை புல்லினை நிறுத்தி

கரையான்களை தின்றுவிடு

 

காதலிக்கும் போதும்

உனக்கும் எனக்கும்

குடும்பம் இருந்தது

கல்யாணம் எனறால்

புது உலகத்தில் பிறந்தாற்

போல் பசப்பாதே

முழுவதும் இருள் கவியும் முன்

உள்ளத்தை சொல்லி விடு

 

 

 

 

 

கருந்துளைகள்

கருந்துளைகள்  விண்வெளியில் நடனமாடுகின்றன.  இவைகள் ஒன்றை ஒன்று சு்ற்றி வருகின்றன. ஒன்றை ஒன்று ஈர்த்து கொள்ள 100 ஒளி ஆண்டுகள் ஆகும்.

Dancing black hole twins spotted

Virgo cluster (SPL)

A giant amalgam of black holes sits at the centre of the Virgo galaxy cluster

Researchers have seen the best evidence yet for a pair of black holes orbiting each other within the same galaxy.

While such "binary systems" have been postulated before, none has ever been conclusively shown to exist.

The new black hole pair is dancing significantly closer than the prior best binary system candidate.

The work, published in the journal Nature, is in line with the theory of the growth of galaxies, each with a black hole at their centre.

The theory has it that as galaxies near one another, their central black holes should orbit each other until merging together.

But evidence for black holes nearing and orbiting has so far been scant.

Dancing cheek-to-cheek

As matter falls into black holes, it emits light of a characteristic colour that in turn gives information about the direction in which the black hole is moving.

In a binary system, two beams should be emitted, each a slightly different colour.

Twin black holes graphic

The black holes emit two beams, each a slightly different colour

Todd Boroson and Tod Lauer of the US National Optical Astronomy Observatory analysed some 17,500 spectra from the Sloan Digital Sky Survey, and have now found just such a pair of emissions coming from a distant quasar.

The researchers estimate that the two light sources come from black holes between 20 million and one billion times more massive than our Sun.

The black holes are separated by an estimated distance of less than a third of a light-year - cheek-to-cheek by black hole standards and significantly closer than the postulated binary system spotted by the Chandra X-ray Observatory in 2003.

The pair are estimated to dance around one another every 100 years.

 

 

 

கீற்று வாக்கெடுப்பு ஜெ உண்ணாநிலை

கீற்று வாக்கெடுப்பு

 

போர் நிறுத்தம் வேண்டி ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பதுhttp://manimalar.wordpress.com/2009/03/07/கீற்று-வாக்கெடுப்பு/

நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் எத்தனை இடங்கள் பிடிக்கும் –டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பு 6.3.2009

நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் எத்தனை இடங்கள் பிடிக்கும் –டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பு 6.3.2009

 

காங்கிரஸ்  145

கூடுதல் விபரங்களுக்கு சொடுக்கவும்

http://manimalar.wordpress.com/2009/03/06/நாடாளுமன்ற-தேர்தலில்-கட்/

Thursday, March 5, 2009

பெண்களுக்கு வலைகள் எப்படி எல்லாம் விரிக்கபடுகிறது

 

   ஒரு பெண் சென்னை பேரூந்தில் கைப்பை ஒன்று அனாதையாக கிடக்க அதை எடுத்து உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் திறந்து பார்க்க அதன் உள் கைபேசி இருக்க அதில் உள்ள கை பேசி சொந்தகாரர் எண்ணை தொடர்பு கொண்டு  தனது முகவரி கொடுத்து வந்து பெற்று கொள்ளுமாறு கூறினார்.  இங்கே நீங்கள் போலீஸிடம் ஏன் கொடுக்க கூடாது என்று கேட்கலாம்(தயவு செய்து இனைப்புக்கு செல்லவும்) http://manimalar.wordpress.com/2009/03/05/பெண்களுக்கு-வலைகள்-எப்பட/

மெடிகிளைம் ஜாக்கிரதை

மெடிகிளைம் ஜாக்கிரதை

 

   ஒருவர் ரூ 350000 மெடிகிளைம் எடுத்து அதற்கான பிரிமீயம் கட்டி வருகிறார். மெடிகிளைம் நிறுவன மருத்துவர்  அவரை பரிசோதித்து  எந்தவித நோய்களும் இல்லை என சான்று அளிக்கிறார் . மூன்று மாதங்கள் கழிந்த பின்பு கிளைம் எடுத்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அந்த செலவை அவர் மெடிகிளைம் நிறுவனத்திடம் கேட்க மேற்படி நிறுவனம் தர மறுத்து விட்டது. காரணம் மாரடைப்பை pre existing disease ( ஏற்கெனவே உள்ள நோய் மறைக்கப்பட்டு உள்ளது  
என வாதிட மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுவனத்துக்கு (இனைப்புக்கு செல்க) 

Wednesday, March 4, 2009

பயோனிக் கண்கள் பார்வை தெரியாதவர்களுக்கு பார்வை அளிக்கிறது

பயோனிக் கண்கள் பார்வை தெரியாதவர்களுக்கு பார்வை அளிக்கிறது
ரோன் எழுவத்தி முன்று வயது ஒரு ஆய்வாக நடத்திய பயோனிக் கண் வைத்து தற்போது பார்வை பெற்று உள்ளார் . இந்த பயோனிக் கண்ணில் ஒரு நிழ்ற்பட்க்கருவியும் ,பட ஆய்வரும் (வீடியோ ப்ரோசெச்சொர் ) ஒரு சூரிய மூக்கு கண்ணாடி யில் அம்மைகபட்டு இருக்கும் . அது பார்க்கும் உருவத்தை கம்பிஇல்ல முறையில் கண்ணுக்கு வெளியே இருக்கும் சிறிய பெரும் கருவிக்கு அனுப்பும் அந்த பெரும் கருவி சிறு வயர்கள் மூலம் கண்ணின் பாப்பா வில் உள்ள ஏலக்ராட்ட்ஸ் வரிசையில் பெறப்பட்டு ஏலக்ராட்ட்ஸ் தூண்டப்பட்டு அது பெற்ற செய்தியினை பார்வை நரம்புக்கு மூலம் மூளைக்கு அனுப்பும் இதனால் பார்வை இல்லாதவர்களால் பார்க்க இயலும் http://news.bbc.co.uk/2/hi/health/7919645.stm

Tuesday, March 3, 2009

அரசு சார தொண்டு நிறுவனங்கள் அரசுடன் தொடர்பு கொள்ள வசதி

அரசு சார தொண்டு நிறுவனங்கள் அரசுடன் தொடர்பு கொள்ள வசதி இந்திய அரசின் கீழ் கண்ட வலைத்தளத்தில் சென்று உங்களை பதிவு செய்து கொண்டு இந்திய அரசு எந்தெந்த திட்டங்களுக்கு மான்யம் தருகிறது என்று அறிந்து கொண்டு மக்களுக்கு சிறப்பாக திட்டங்களை எடுத்து செல்லலாம் http://ngo.india.gov.in/default.php?X

Monday, March 2, 2009

ஸ்லம் டாக் ஆஸ்கார் வாங்க காங்கிரஸ் தான் காரணம் -மோடி

ஸ்லம் டாக் ஆஸ்கார் வாங்க காங்கிரஸ் தான் காரணம் -மோடி மோடி தனது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஸ்லம் டாக் ஆஸ்கார் வாங்க காங்கிரஸ் தான் காரணம் என்று தெரிவித்து உள்ளார் . ஏனெனில் அறுவது ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டும் சேரிகள் பெருகுவதற்கு காரணமாய் இருந்து உள்ளது. அதனால் மேற்படி பரிசு பெற காரணம் காங்கிரஸ் தான் என்றார்; குஜராத்தை பின்பற்றி மகாராஷ்டிரா முன்னேற வேண்டும் என்கிறறர் . இடையில் பா.ஜ .கா இந்தியாவை ஆட்சி செய்தது மறந்து போனதா என்ன http://in.news.yahoo.com/48/20090303/814/tnl-oscar-credit-for-slumdog-should-go-t_1.html

Saturday, February 28, 2009

பாதுகாப்பான இடங்களுக்கு வந்தவர்கள் அடிமைகளாக


 

கிளிநொச்சி  மருத்துவமைனை மேல்பகுதியில், பாதுகாப்பான இடங்களுக்கு வந்த தமிழ்மக்களில் குறிப்பிட்ட ஆண்களையும். பெண்களையும் இழுத்து வந்து அடிமையாக வைத்து இருப்பதாகவும் அப் பகுதிகளில் பெண்களின் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பதாகவும்., முகாம்களுக்கு வரும் ஐநா சபையினரிடம் அம்மக்கள் தமிழில் தங்களது பிள்ளைகளை கானோம. என்று சொல்வதை சிங்கள ராணுவத்தார்கள் ஆங்கிலத்தில்  விடுதலைபுலிகள் அவர்கள் பிள்ளைகளை இழுத்து சென்றதாக கூறுவதாகவும் தமிழ்நெட்.காம் தெரிவிக்கிறது.

இன்னொரு சுற்றுக்கு


 

வர வர மனைவிமக்களிடம்

அதிகாரம் வீழ்வது கண்டு

காய் அடிக்கப்பட்ட பன்னியாய்

கோபம் கொழுத்தது சண்டைக்காக

 

எல்லாரையும் விட்டு விட்டு

ஓடிவிட  வேண்டுமென

மன நாய் சங்கிலியை

அறுத்து கொண்டிருக்கிறது

 

சட்டையை போட்டு கோபத்தை

முடி மறைத்ததாலும்

கோபம் திரும்புகிறது

தவறாய் போட்ட பட்டன்மீது

 

வெளியே செல்வது  உசிதமாக

புறாக்கால்கள்  பறக்கின்றன

தெரிந்தவரின் வணக்கங்கள்

தவிர்க்க தலை புதைக்கிறேன்

சாலையில் நெருப்புகோழியாய் 

 

 

எங்கெங்கோ சுற்றியது

மனமாகிய உடலும்

உடலாகிய மனமும்

திருப்பங்களில் வீசிய

தென்றல் தண்மையாக்க

செக்குமாடாய் கால்கள்

வீடு புகுந்தது

இன்னொரு சுற்றுக்கு

 

 

 

 

 

Friday, February 27, 2009

புலிகள் சிங்கள் விமானத்தை சுட்டு தள்ளியாதுபுலிகள் சிங்கள் விமானத்தை சுட்டு தள்ளியாது.

புலிகள் சிங்கள் விமானத்தை சுட்டு தள்ளியாது
புலிகள் சிங்கள் விமானத்தை சுட்டு தள்ளியாது.
ஸ்ரீலங்கா விமானம் முல்லைத்தீவின் அருகில் இன்று 11.30 மணிக்கு வெடித்து சிதறியது . இதனை மக்கள் எல்லாரும் பார்த்து உள்ளனர், ஆனால் புலிகள் அதிவேக விமானத்தை சுட்டும் தள்ளும் சக்தி இல்லை என்று விற்பன்னர்கள் சொன்னாலும் 12.07.2007 இல் இதே போன்ற விமானத்தை புலிகள் சுட்டுவிமானம் எதிர்ப்பு எறிகணையால் சுட்டு தள்ளியதால் அவசரமாக தரை இறக்க பட்டதை நினைத்து பார்த்தல் இது புலிகளின் வீர தீர செயல் தான். புலிகள் இதை உறுதி படுத்தவிட்டலும். வேல் வெற்றி வேல்

பெண்கள் தாயாகவே பிறக்கிறார்கள்

பெண்கள் தாயாகவே பிறக்கிறார்கள்
எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு பூனை நான்கு குட்டிகள் ஈன்று விட்டு இறந்து விட்டது. நான்கு குட்டிகளும் நல்ல அழகு . இறந்து போன தாய் பூனையினை புதைத்து விட்டு குட்டி பூனைகளை அந்த வீட்டுக்கு அருகில் உள்ள எல்லா பெண்களும் அந்த குட்டிகளை தங்களது பராமரிப்பின் கீழ் கொண்டுவந்தனர் . அழுகின்ற குட்டிகளை பார்த்து அதனை பெரும் மனம் இளகி கவர் பால் ஓன்று உடன் வாங்கி வந்தார்கள் . அப்பொழுது குட்டிக்கு எப்படி புகட்டுவது என்று தெரியாமல் விழித்து பின்பு நிப்பிள் எதாவது இருக்குமா என்று கை குழந்தை வைத்திருக்கும் பெண்ணிடம் கேட்க . இல்லை என்று பதில் வர என்ன செய்வது என்று மீண்டும் முழித்து பின் ஒரு வழியாய் இங்க் பில்லர் ஒன்றின் மூலம் குட்டிகளுக்கு பால் கொடுப்பது என முடிவுக்கு வந்து , ஒரு குட்டிக்கு ஊட்டினர் ஒரு பெண். ஊட்டிய குட்டியை தனியாக வைத்து விட்டு ஒவ்வொரு குட்டிகளுக்கும் பால் புகட்டினார்கள் . அந்த குட்டிகள் கத்த ஆரம்பித்தால் , எல்லா வீட்டு கதவுகளும் திறக்கிறது பால் புகட்ட, அடிக்கடி வேறு போய் குட்டிகள் என்ன செய்கின்றன என பார்வை வேறு. எப்படி இந்த பெண்கள் அனதாரவாக விடப்பட்ட குட்டிகளை தங்கள் பிள்ளைகள் போல் நினைக்கமுடிகிறது. எல்லா பெண்களிடமும் அவர்கள் பெண்ணாக பிறக்கும் பொழுதே தாய்மை எண்ணமும் சேர்ந்தே பிறக்கிறது.எங்க ஊரில் கிராமத்தில் பெண் பிள்ளைகளை “தாய் ” என்று விளிப்பார்கள் . இதனால்தானா.

Thursday, February 26, 2009

உதயன் செய்தி தாள் நிருபர் திரு. நடேசபிள்ளை வித்யா தரன் கைது

உதயன் செய்தி தாள் நிருபர் திரு. நடேசபிள்ளை வித்யா தரன்
உதயன் செய்தி தாள் நிருபர் திரு. நடேசபிள்ளை வித்யா தரன் முதலில் அடையாளம் தெரியாத ஆட்களால் கடத்த பட்டார் என்று ஆறு நாட்கள் முன்பு சொன்ன சிங்கள அரசு இன்று அவர் கைது செய்யப்பட்டதாக அவர் சிறிலங்கன் நிலப்பகுதி விசாரணை துறை யினால் பிடித்து செல்லப்பட்டு விசாரிக்க பட்டு உள்ளார் . வன்னியில் சிங்கள ராணுவம் மக்களை தாக்கியதையும் விடுதலை புலிகள் அமைப்பினரின் பேட்டி கண்டு வெளிஇட்டதாலும் இக்கைது என்றுதெரியவருகிறது

Wednesday, February 25, 2009

என் மகளே

வானம்
காற்றை கொண்டு
மேகம் குலைத்து
செய்த பொம்மைகளை
உனக்காக வாங்கசென்றேன்

கரடி பொம்மையினை
எடுப்பதற்குள்
யானையாய் மாறியது
காற்றில்

கோபம் கொண்டு
வானத்தின் கன்னத்தில் அறைய
கருத்தது மேகம்
வழிந்தது மழை கண்ணீர்

காற்றும் மழையும்
நின்றதால்
உருகுலையா பொம்மை
வாங்கி
உனக்கு அளிக்க வந்தால்


உடல் பொம்மை
விட்டு விட்டு
எனை தேடி
உன் உயிர் வானுலகில்
என் மகளே

Tuesday, February 24, 2009

வெள்ளநிவாரணம்

வெள்ளநிவாரணம்

“ஆயா ரேசன்கார்டு ஜெராக்ஸ் எடுத்து வை” என்றாள் பக்கத்துவீடடு ராணி

“என்னத்துக்கடி” என்றார் அஞ்சலை ஆயா

‘உனக்கு தெரியாதா 2000 ரூபாய் மழை பெஞ்சதுக்கு கொடுக்காங்க”
‘என்னத்துக்கடி”
“வெள்ள நிவாரண நிதியாம்”
“யாரடி சொன்ன”
“வார்டு மெம்பர் சொன்னார், ரேசன் கார்டு ஜெராக்ஸ் எடுத்து வை”
“நீ எடுக்கும் போது எனக்கும் எடுத்துதாயேன்”
“உன் பேரன் எடுத்துட்டு வாரேன் சொல்லிட்டுங்க நான் போகல”
“ எம்மா முதலெ சொல்லக்கூடாது”
‘மறந்துட்டு ஆயா, உங்க சங்கர்கிட்ட சொல்ல வேண்டியதுதானே”
“அவன் சொன்னத கேட்டுட்டு தான், மறுவேலை பார்ப்பான்
ஆங்………… சொல்லி பார்க்கனு……. அது எங்க கேட்க போது”
“சரி நான் வாரேன் ஆயா”
“சரிம்மா”



“சாந்தி மேடம், அந்த தர்மபுரம் 4 வது வார்டு வெள்ள நிவாரண பெனிபிஸரி லிஸ்ட் தயாரா”என உதவியாளர் ராஜா
“சார் நிறைய பேர் இருக்காங்க இன்னைக்கு முடியுமானு தெரியல” என்றார் தட்டச்சர் சாந்தி
“என்னம்மா சொல்ற 6 மணிக்கு அந்த ஊராட்சிததலைவர் , ஆர்.ஐ யோடு வந்து லிஸட் வாங்க வாரேன் என்று சொல்லி இருக்கார் நீங்க என்னனா இப்படி சொல்றீங்க”
“என்ன சார் செய்றது நாலு பேர் செய்ய வேண்டிய வேலையை நான் மட்டும் செய்யனும்ன லேட்டாதான் ஆகும்”
“உங்கள குறை சொல்லல அம்மா, அவங்க வந்த என்ன சொல்றதுன்னு தான் பார்க்கேன்”
“அவசரப்படுத்தாதீங்க சார் தப்பாயிட்டுன்னு என்னை குறை சொல்ல கூடாது’
“சரிம்மா நாளைக்காவது முடியும்மா”
“நாளைக்குள் முடிச்சிராலாம் சார்”
“நாளைக்கு மதியத்துக்குள் முடிச்சிருனும்”
“சரி சார்”
“நான் அவங்களை நாளைக்கு வரச்சொல்றேன்”


“உறலோ நான் மணியூர் வட்டாட்சிஅலுவலகத்திலிருந்து
உதவியாளர் பேசுறேன் தலைவர் இருக்காறா”
“தலைவர்தான பேசுறேன் சொல்லுங்க சார்”
சார் இன்றைக்கு லிஸ்ட் ரெடி யாகாது போல நாளைக்கு வாங்கிகோங்க”
“என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க நாளைக்கு கொடுத்த நாங்க என்னைக்கு டோக்கன் கொடுத்து என்னைக்கு பணம் கொடுப்பது”
“சாரி சார் நாளைக்கு வாங்கிகோங்க. எங்க ஆர்.ஐ யிட்ட நான் இன்பார்ம் பண்ணிறேன் சார்.”
“சரி என்ன செய்ய நாளைக்கு சீக்கிரம் கொடுக்க பாருங்க இல்லைனா சாலை மறியல் கிறியல் பண்ணி தொலைக்க போறனுக பின்னே பிரச்சனையாய் போயிடும் அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்”
“நாளைக்கு கட்டாயம் ரெடியாய்டும்”
“சரி சார்”

“கேட்லெம்மா, நாளைக்கு ரெடி பண்ணிரு இல்லையனு பெரிய பிரச்சனை ஆயிடும்”
“சரி சார்”




“உறலோ நான் தான் பேசுறேன்” என்றார் கயல்
“சொல்லு” என்றார் கயலின் கணவர் சந்திரன்

“ஒன்னுமில்லே வெள்ள நிவாரண நிதிக்கு ரேசன் கார்டு ஜெராக்ஸ் கேட்டார் வார்டு மெம்பர், கொடுக்கவா”
“வேண்டாம் நமக்கு எதுக்கு”
“நம்ம வீட்டை சுத்தி ஏரி தண்ணீர் எப்படி ஒடிச்சு இப்பமும் தேங்கி நீற்கிறது தண்ணீயே வராத ஏரியால உள்ளவங்க எல்லாம வாங்கறாங்க.நம்ம வாங்கினா என்ன “
“வேண்டாம்மா அசிங்கமா…… இருக்கும்”
“நானும் இதை சொன்னேன் அதுக்கு எங்க உங்களை விட பணக்காரங்கள் எல்லாம் வாங்கறாங்க. .நீங்க நம்ம கட்சிகாரங்க வேற, கட்டின வரியை திரும்ப வாங்கற மாதிரி நினைச்சுக்கோங்க என்று வார்டு மெம்பர் சொல்றாறர் என்ன செய்ய”
“வேண்டாம்னு சொன்ன கேட்கமாட்டங்கற உனக்கு இஷ்டம்னா செய்”
“என்னங்க இப்படி சொல்லிட்டிங்க வேண்டாம்னு சொல்லிறவா”
“சரி சரி கொடு, நம்ம வார்டில் உள்ள அரசு பள்ளிகூடம் கட்டுமான வேலை முடியாம கிடக்குல அதை கட்டுவதற்கு டோனஷனாக கொடுத்திறலாம்”

என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு மனதுக்குள் எல்லாருக்கும் வெள்ள நிவாரணநிதி உண்டு என்று சொன்ன அரசாங்கத்தின் மீது சின்னதாக கோபம் வந்தது. சந்திரனுக்கு


“ஆயா எல்லாம் ரெடியா வச்சிருக்கிறயா” என்றார் வார்டு மெம்பர்
“ ஏன்ப்பா கட்டாயம் கிடைக்கும்ல “
“ஆயா உன்ன மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். சரி ரேசன் கார்டு ஜெராக்ஸை கொடு ஞாயிற்று கிழமை காலையில் பஞ்சாயத்து ஆபிஸக்கு வந்துரு”
“சரிப்பா நீ நல்லா இருக்கனும்”
“சரி சரி ஞாயிற்று கிழமை மறந்திறாதே”
“சரிப்பா” என்றாள் மகிழ்ச்சியாக.


ஞாயிற்றுகிழமை தர்மபுரம் ஊராட்சிஅலுவலகம் காலை 5 மணியிலிருந்து களை கட்ட ஆரம்பித்தது. பெண்கள் கூட்டம் ஆண்கள் கூட்டத்தை விட அதிகமாக இருந்தது. அஞ்சலை ஆயா பேரனை கெஞ்சி கூத்தாடி பார்த்தும் வெள்ள நிவாரண பணத்தை வாங்க வரிசையில் வரபோக மாட்டேன் என்று சொல்லி விட்டதால், கஷ்டப்பட்டு வயல் வழியாக நடந்து ஊராட்சி அலுவலகம் வருவதற்குள், அவளுக்கு முன்பாக ஐம்பது பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஆயா கடைசியாய் நின்றவள் பின் போய் நின்றார்.

“என்ன ஆயா வேறு யாரும் வீட்ல இல்ல நீ எவ்வளவு நேரம் நீப்ப” என வரிசையில் முன்னால் நின்ன பெண் கேட்டாள்
“தறுதலை வரமாட்டனு சொல்லிட்டு”
“யாரு”
“அதான் ஒன்னை பெத்து போட்டுட்டு, போய் சேந்துட்டாள என்மவ, அவ பிள்ளையைத்தான் அதாம்மா என் பேரன்”
“எல்ல பிள்ளைகளும் அப்படிதான் இருக்குக”:
ஆயா நிக்க முடியம்ம நின்ன இடத்திலேயே உட்கார்ந்தார்

பத்து மணிக்கு வாருவாங்க வந்து பணம் கொடுப்பாங்கனு யாரோ சொல்லிட்டு போனார்கள். ஆயா காலையில் கொஞ்சம் கஞ்சி வச்சு குடிச்சுட்டு வந்ததுதான்.நேரமாக நேரமாக கூட்டம் மழைக்கால எறும்பு கூட்ட வரிசை போல் நீண்டு கொண்டே போனது. வெயில் ஏற ஆரம்பித்தும் ஆயாவுக்கு லேச மயக்கம் வருவது போல் இருந்தது. பக்கத்திலிருந்த பெண்ணிடம்

“ஏம்மா நான் நிழலிருக்கேன் ஆபிஸர்மார்கள் வந்த கூப்பிடும்மா”

ஆயாவின் நிலமை பார்த்து அந்த பெண்ணும்

“சரி ஆயா கண்ணுக்கு எதிரே நிழலில் உட்காரு அப்பதான கூப்பிட வசதியாய் இருக்கும்”

ஆயா நிழலில் உட்கார்நதாலும் மீண்டும் கூட்டத்தில் போய் சேரும் பொழுது யாரும் தன்னை இடையில் நுழைஞ்சுட்டுனு திட்ட கூடாதே எனும் சின்ன பயத்துடன் ஆபிஸர் வருகிறாரா என வழியையும், கூட்டத்தில் அவள் நின்ற இடத்தையும், சொல்லிட்டு வந்த பெண்ணின் முகத்தையும் உத்தேசமாக பார்த்து சிரித்தாள் . ஆபிஸர் வருகிற மாதிரி தெரியல. ஆயா லேசாக சாய்ந்து கண் அயர்நதாள் . ஏதாவது சத்தம் கேட்டால் அரை குறையாக கண்ணை திறந்து பார்த்து விட்டு தூஙகுவதும் விழிப்பதுமாக இருந்தாள்.யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு ஆயா திடுக்கிட்டு எழுந்து பார்த்தாள் . கூட்டம் அலை மோதி கொண்டு இருந்தது .ஆயா தான் நின்ற இடம் தேடி வரிசை பக்கம் சென்றாள். நின்ற இடம் தெரியாமலும், சொல்லி வந்த பெண்ணும் தெரியாமலும் முழித்தாள். அதற்குள் கூட்டத்தினர், ஆயா ஊடே நுழைவதாக சிலர் சத்தம் போட்டனர். ஆயா ‘நான் முதலிலே வரிசையில் தான் நின்னேன் மயக்கமாக இருந்ததால் நிழலில் நின்னதாக கூறியது’ கூட்டம் போட்ட சத்தத்தில் ஆயாவுககே கேட்கவில்லை. அதற்குள் ஆயா சொல்லி விட்டு வந்த பெண் ஆயாவை அழைத்து தன் பக்கம் நிப்பாட்டி கொண்டு கூட்டத்துக்கு ஆயா முதலில் வந்து நின்னதை சொல்லி விளக்கமளித்தாள் .கூட்டம் லேசான சலசலப்புடன் முணுமுணுத்தது. எல்லாரும் இப்படி சொல்லிட்டு ஏமாத்தறாங்க என சிலர் சததமாக காதுபட பேசினார்கள். நிவாரணநிதி கொடுக்கும் ஆபிஸர்கள் வந்து விட்டதாக யாரோ சொல்ல கூட்டம் நெருக்க ஆரம்பித்தது. ஐந்து ஐந்து பேராக உள்ளே விட்டு பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆயா பக்கத்தில் இருந்த பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்தாள். இப்ப ஆயாவுக்கு கொஞ்ச பரவாயில்லை போல் இருந்தது. இன்னும் பத்து பேர் போன ஆயாவின் முறை வந்து விடும் ஆயா ஆவலுடன் அந்த பணம் கொடுக்கும் வாசலை நெருங்குவதை ஏதோ வைகுண்ட ஏகாதேசிக்கு சொர்க்கவாசல் திறப்பு போல் ஆவலுடன் பார்த்தாள். இன்னும் அஞ்சு பேர்தான், பணம் வாங்கி செல்பவர்களிடம் என்னவெல்லாம் கேட்கிறார்கள் என விசாரித்தாள்.

“ஒன்னுமில்ல ஆயா ரேசன் கார்டு வாங்கி பார்த்து, சீல் போட்டு கையெழுத்து வாங்கிட்டு பணம் கொடுக்கறாங்க’

ஆயாவிற்கு கைநாட்டு போட மை வச்சிறாப்பாங்களா என அந்த பெண்ணிடம் கேட்பதற்கு முன் வெளியெ வந்த பெண் போய்விட்டாள. கைநாட்டு மை வச்சிறாப்பாங்களா எனும் பயம் வேறு வந்துவிட பக்கத்திலிருந்த பெண்ணிடம் விசாரித்தாள்

“மை வைச்சிருப்பாங்களா நான் கைநாட்டு அதான்”
“ ஆயா தொண தொணக்காத மை வச்சிறுப்பாங்க கவலைபடாதே” என்றாள் முன்னால் நின்ற பெண்

ஆயாவும் நான்கு பெண்களும் உளளே சென்றார்கள்.
ஆயா நான்காவதாக இருந்தார். ஆயாவிற்கு முன நின்ற பெண்கள் பணம் வாங்கி சென்றார்கள் .ஆயாவின் முறை வந்ததது. ஆயாவுக்கு லேசாக சந்தோஷம் முகத்தில் வந்து சென்றாலும், சின்ன பதட்டமும் ஏற்பட்டது.

“ஆயா உன் கார்டை கொடு” என்றார் ஒரு அலுவலர்

“எனனதுப்பா”
“ரேசன் கார்டைகொடு ஆயா”
“இந்தப்பா”

கார்டை வாங்கியவர் தன்னிடம் உள்ள லிஸ்ட்டில் உள்ள
பெயர்கள் கார்டு எண்கள் ஆகியவற்றில் ஆயாவின் கார்டு நம்பர் பெயா ஆகியவற்றை சரிபார்த்தார்.ஆயாவிற்கு எப்ப முடிப்பார் எப்ப பணம் கொடுப்பார்கள் என பதட்டம் ஏற்பட்டது. மனதுக்குள் தன் பேரனை வைதாள். இறந்து போன தன் மகளையும் வைதாள். கார்டை சரி பார்த்தவன் எழுந்து போய் பணம் கொடுப்பவனிடம் ஏதோ கேட்டான். ஆயா என்ன இழவு . ‘என்னத்தை போய் கேட்கிறான் இவன். பணம் கொடுத்தால் போதும்’ என மனதில நினைத்து கொண்டாள்.கார்டை சரி பார்ப்பவன் . அவன் இடத்தில் வந்து அமர்ந்து மீண்டும் ஒரு தடவை ஆயாவின் ரேசன் கார்டை லிஸ்டுடன் சரி பார்த்தான்.
ஆயாவிற்கு என்ன இது, என சின்ன பயம் மனதில வர

“என் கார்டுதான்.. ப்பா . என்னால நிக்க முடியல.” என்றாள்

“இல்ல ஆயா . கார்டு நம்பர் சரியில்ல அதான்”

“என்னப்பா சொல்ற “

“ஆயா, உன் கார்டு நம்பரும் லிஸ்ட்டில் இருக்கும் நம்பரும் ஒரே மாதிரி இல்ல, அதானால…………..”
“அதானல……….. என்னப்பா”

அவன் தயங்கி தயங்கி “ஆயா உனக்கு பணம் கொடுக்க முடியாது “

ஆயாவுக்கு தலை சுற்றி மயக்கமே வந்து அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்து விட்டாள். அலுவலர்கள் போலீஸ்காரரை அழைத்து ஆயாவை வெளியே கொண்டு விடுமாறு கூறினார்கள்.

அதற்குள் வெளியே ஆயா மயக்கம் அடைந்த விஷயம் கேள்விபட்டு வார்டு மெம்பர் உள்ளே வந்து அலுவலரிடம்

“ஏன் சார் ஆயா கார்டு நம்பரை நான்தான் எழுதி கொடுத்தேன்.”
என்று கூறினார்

“சார் நம்பர் சரியாகத்தான் இருக்கு, கார்டில் ‘G” இருக்கு லிஸ்ட்டில் ‘G” க்கு பதிலாக ‘W” என டைப அடிச்சிருக்கு. அதனால………..” என இழுத்தார்

வார்டு மெம்பர் லிஸ்டை கையில் வாங்கி தான் கொடுத்த லிஸ்ட் நகலுடன் சரிபார்த்தார். அலுவலர் சொன்ன படி G” க்கு பதிலா லிஸ்ட்டில் ‘W” என அடிச்சிருந்தது..

“ஏன் சார் எழுத்துதானே மாறியிருக்கு, கொடுங்க. எனக்கு தெரிஞ்சவங்கதான்”.

“சாரி சார், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது”.

வார்டு மெம்பர் ஆர்.ஐ யிடம் சென்று முறையிட்டார். ஆர்.ஐயும் தன்னால் ஒன்றும் செய்யவியலாது என தெரிவித்து விடவே, வார்டு மெம்பர் ஊராட்சி தலைவரை அழைத்து வந்து அலுவலர்களிடம் பேசி பார்த்தார்..

“சார் எங்களால் ஒன்றும் செய்யவியலாது. தாசில்தார் நினைத்தால் கூட செய்யமுடியுமா” என தெரியாது என அலுவலர்கள் கைவிரித்தனர்.

ஆயா அதற்குள் மயக்கம் தெளிந்து அழ ஆரம்பித்து விட ஆயாவை சுற்றி கொஞ்ச கூட்டம் . உச் கொட்டி வருத்தம் அடைந்தது. முடிந்த அளவு முயற்சி செய்தும் ஒன்றும் செய்யவியலாது. ஆயாவின் முகத்தில முழிக்க கஷ்டபட்டு
கொண்டு ஆயாவின் அருகே வந்த வார்டு மெம்பர்

“வா ஆயா போகலாம், வீட்டில் கொண்டு விடுகிறேன்”

ஏன் தனக்கு பணம் கிடைக்கவில்லை என்பது தெரியாமலும், இனி கிடைக்குமா என்பது தெரியாமலும், வார்டு மெம்பர் வாங்கி தருவர் என்ற அரை குறை நம்பிக்கையுடன் ஆயா வார்டு மெம்பர் வண்டியில் கண்ணீரை சேலையால் துடைத்து கொண்டு ஏறி அமர்ந்தாள்

கொசு என கேவலமாக நினைக்காதீர்கள்

கொசு என கேவலமாக நினைக்காதீர்கள்
உடனே மலேரியா டயேரியா காலராவை நினைக்காதீர்கள் . அல்லது ஒரு அடியில் செத்துபோகும் கொசு என்ன பெரிய இதா என்றுதானே நினைக்கிறீர்கள் .ரஷியாவின் விண்வெளி வீரர்கள் ஒரு கொசுவை அனைத்துஉலக விண்வெளி ஆய்வு கலத்திற்கு எடுத்து சென்று அக் கொசுவை மேற்படி கலத்திற்கு வெளியே விண்வெளியில் வைத்து விட்டு ஆய்வு செய்தனர். அந்த கொசு சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்தது , மேலும் சுமார் 140 டிகிரி இலிர்ந்து 60 டிகிரி வெப்பத்தையும் தங்கி உயிர் வாழ்ந்தது. கல்த்திருக்கு கொண்டு வந்த போது கால்களை அசைக்கும் சக்தியுடன் இருந்தது. ஆ ...... ஊ........ naa உண்ணாநிலை என்பவர்கள் மேற்படி கொசுக்கு
times of india 22/2/09

Saturday, February 21, 2009

நான் கடவுள்


 

இன்று தான் பார்ததேன் .திரையரங்கில் பார்க்க வேண்டுமென்று முடிவெடுத்தால் இவ்வளவு நாள் ஆகிவிட்டது. தாம்பரத்தில் கூட்டம் அதிகம் இல்லை. நெறைய பெயர் விமர்சனம் எழுதி விட்டார்கள். கதை தமிழ்மக்களுக்கு மாறுபட்ட புலத்தில் ஆரம்பமாகிறது. அகம் பிரம்மாஸி  என்பதை எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் அத்வைதம் தைவதம் துவைதம் போன்ற பெரிய வார்த்தைகள் தமிழனுக்கு தெரியாது. எந்த கடவுள் என்றாலும் அவனுக்கு பிடித்த ஸ்டைலில் கும்பிட்டுவிட்டு போயிட்டே இருப்பான். இந்த படம் பார்க்கும் பொழுது ஸலம்டாக் மில்லினர் படம் நினைவுக்கு வந்தது. அதிலும் கொடுமையாக குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் கும்பல் வரும். இதிலும் அதை விட ரொம்ப கொடுமையாக மனதில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா எனும் எண்ணத்தை மனதில் கொண்டுவந்த பாலா பெரிய வெற்றி பெறுகிறார். ஆரியா பயம் காட்டுகிறார். உழைத்தது வீண் போகவில்லை. மனதில் பிச்சை எடுக்கும் கூட்டம்  அதிகமாக பாதித்து விட்டது. நான் எப்பமும் பிச்சை போடுவதை விரும்புவதில்லை.இந்த படம் பார்த்த பிறகு பிச்சை எடுப்பவர்களுக்கு காசு போடாமல்  சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என முடிவெடுக்க வைத்து விட்டது.  பூஜா நன்றாக நடித்து உள்ளார். சிறந்த நடிகை பட்டம் வாங்குவார்  பொதுவாக அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர். அவ்வளவு கஷ்டத்தில் பிச்சைகாரர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியாக இருப்பது கொஞ்சம் மனம் நிறைவாக உள்ளது. அந்த பொயவரிடமிருந்து குழந்தையை பிடிங்கி விட்டு சென்ற பின்பு ஆறுதல் சொல்ல வருபவரிடம் கடவுள் பற்றி அந்த பெரியவர் சொல்லும் வசனம் ஜெயமோகன் சூப்பர். . கட்டாயம் இந்த படம் சிறந்த படம் பட்டம் வாங்கும். ஆனால் அந்த கடைசி காட்சி என்னை அறியாமல் பாலா மீது பெரிய எரிச்சலை  ஏற்படுத்தியது.  அது என்ன “வாழவழி தெரியதவர்களுக்கு நீ தரும் வரம் மரணம் என்ன தத்துவமோ. என்ன மதமோ. இது கருணை கொலை வகையில் கூட வராது. சாரி பாலா

ஒபாமா ஜிஸஸைவிட பெரியவர்


 

அமெரிக்காவில் நடந்த வாக்கெடுப்பில் ஒபாமா முதல் இடத்திலும் ஜிஸிஸ் இரணடாவது இடத்திலும். மார்டின் லூதர்கிங் முன்றாம் இடத்திலும் மதர் தெரசா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.   

Thursday, February 19, 2009

வக்கீல் போலீஸ் மோதல் சர்வே விபரம் —-கீற்று

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் [20 votes total]
ஈழ ஆதரவுப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சி (15) 75%பார்ப்பனர்களின் ஊதுகுழலாக திமுக அரசு (2) 10%சீருடை குண்டர்களாக போலீசார் மாறியிருப்பதால் (3)

வீட்டு சொந்தக்காரர்கள் நடு தெருவுக்கு வந்து விட்ட பாவம்

வீட்டு சொந்தக்காரர்கள் நடு தெருவுக்கு வந்து விட்ட பாவம்
டெல்லியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் லட்ச கணக்கில் பணம் கொடுத்து சொந்தமாக வீடு வாங்கி பல ஆண்டுகள் சொந்தவீடில் வாழ்ந்த வீட்டு சொந்தக்காரர்கள் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் வீட்டை விட்டு காலி செய்ய வேண்டிய துயர சம்பவம் ஏற்பட்டது .ஏனெனில் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிய கட்டடகாரர் அவர் கார்ப்பரேஷன் வங்கியில் மேற்படி கட்டடம் கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டார் .அவர் மீது வங்கி தொடர்ந்த வழக்கில் வங்கி மேற்படி குடிஇருப்பை தன் வாசம் எடுத்து கொண்டு ஏலத்தில் விட்டு அவர்களுக்கு வர வேண்டிய தொகைனை வசூலித்து கொள்ளலாம் என தீர்ப்பு அளித்தது . அதன் காரணமாக அடுக்குமாடி சொந்த குடிருப்பில் குடிஇர்ந்தோர் உடன் தங்களது சொந்த வீட்டை விட்டு வெளியே தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Wednesday, February 18, 2009

பாக், இந்தியாவிற்கு கடன் பட்டுஉள்ளது. கலெக்ஷன் ஏஜென்ட் யார் ?

பாக், இந்தியாவிற்கு கடன் பட்டுஉள்ளது. கலெக்ஷன் ஏஜென்ட் யார் ?

இந்தியா பாகிஸ்தான் என் இரண்டு நாடுகள் உதயம் ஆகும் போது. ஏற்பட்ட சில செலவுகள் லில் பாகிஸ்தானின்பங்கை பின்னர் தருகிறேன் என பாக தெரிவிக்க இந்தியா அந்த செலவுகளை செய்தது. அவ்வாறு செலவு செய்த தொகை. ரூ. 300 கோடி யாகும். சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் , மேற்படி தொகையினை பாக திருப்பி தரவில்லை. இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இத்தொகை க்கும் வட்டி ஆண்டுக்கு 3 % மாகும் . எத்தனை சதவிகிதம் என்றால் என்ன திரும்ப தர எண்ணம் இருந்தால் தானே. கொடுத்தவனே கவலைபடாமல் இருக்கான் உனக்கு என்ன என்கிறீர்களா .நம்ம ஒவோருதருக்கும் குறைந்த பட்சம் ரூ 3 ஆவது கிடைக்கும். அடுத்த நாடுன்னா கவலையில்லை, நம்மனா கலக்ஷன் ஏஜென்ட் வீட்டு வாசலில் வந்து நிற்பான் .

Tuesday, February 17, 2009

போரை நிறுத்த தயார் புலிகள்

விடுதலை புலிகள் , ஸ்ரீலங்கா அரசு புலிகளின் பகுதிகளில் தாக்குதலை நிறுத்தினால் தங்களும் தாக்குதலை நிறுத்தி போரை நிறுத்த தயார் என தெரிவித்து உள்ளதாக புலிகளுக்கு சார்பான தமிழ் தேசிய கட்சியினர் தெரிவித்து உள்ளதாக சன் தொ. கா . மற்றும் தினகரன், தெரிவித்து உள்ளது. மேலும் ஸ்ரீலங்காவின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஐ.நா படையினை சிறிலங்காவிற்கு அனுப்ப வேண்டும் என துரைமுருகன் தலைமையில் சென்ற பேரவை உர்பினர்கள் இந்திய ஜனாதிபதியிடம் கேட்டு கொண்டு உள்ளார்கள்

தாய்பால் கொடுப்பது குழந்தையின் உயிர்க்கு ஆபத்து

தாய்பால் கொடுப்பது குழந்தையின் உயிர்க்கு ஆபத்து
பிரித்தானியா ,மற்றும் அயர்லாந்து நாட்டில் நீர்சத்து குறைந்து( dehydrated) புதிதாக பிறந்த குழந்தைகளை மருத்துவமனியில் சேர்த்து உள்ளனர், hypernatraemic dehydration அரிதானது என்றாலும் உயிரை குடிக்ககூடியது .பிள்ளைகளுக்கு தாய் போதிய அளவு பால் கொடுக்காவிட்டாலும் , பிள்ளைகள் தாய் பாலை சரியா குடிக்க தெரியாவிட்டாலும் இந்த hypernatraemic dehydration ஏற்படும் .பிள்ளைகளின் இரத்தத்தில் சோடியம் அளவு விரைவாக குறைகிறது. இதற்க்கு கிகிற்சை எடுக்காவிட்டால் seizures, gangrene, brain damage - and in the worst cases, death. பிள்ளையின் நலம் முளை பாதிக்கப்படும். போதிய அளவு தாய் பால் பிள்ளை குடிக்கவில்லை எனில் தாய் பால் புகட்டுவதை நிறுத்தல் நலம்.http://news.bbc.co.uk/2/hi/health/7867686.stm

தாய்பால் கொடுப்பது குழந்தையின் உயிர்க்கு ஆபத்து

தாய்பால் கொடுப்பது குழந்தையின் உயிர்க்கு ஆபத்து
பிரித்தானியா ,மற்றும் அயர்லாந்து நாட்டில் நீர்சத்து குறைந்து( dehydrated) புதிதாக பிறந்த குழந்தைகளை மருத்துவமனியில் சேர்த்து உள்ளனர், hypernatraemic dehydration அரிதானது என்றாலும் உயிரை குடிக்ககூடியது .பிள்ளைகளுக்கு தாய் போதிய அளவு பால் கொடுக்காவிட்டாலும் , பிள்ளைகள் தாய் பாலை சரியா குடிக்க தெரியாவிட்டாலும் இந்த hypernatraemic dehydration ஏற்படும் .பிள்ளைகளின் இரத்தத்தில் சோடியம் அளவு விரைவாக குறைகிறது. இதற்க்கு கிகிற்சை எடுக்காவிட்டால் seizures, gangrene, brain damage - and in the worst cases, death. பிள்ளையின் நலம் முளை பாதிக்கப்படும். போதிய அளவு தாய் பால் பிள்ளை குடிக்கவில்லை எனில் தாய் பால் புகட்டுவதை நிறுத்தல் நலம்.http://news.bbc.co.uk/2/hi/health/7867686.stm

Monday, February 16, 2009

வெளிச்சம் மட்டும் வாழ்க்கை இல்லை

மழை சோவென பெய்து ஓய்ந்து இருந்தது
மழைத்துளிகள் கூரையின் விளிம்பில்
முத்துக்களாய் கோர்த்து நிற்கின்றன
மழை அடித்து காற்று தூயிமைஆயிற்று
தெரு வெளிச்சம் தூக்கலாக இருந்தது
தூரத்தில் லெவல் கிராசிங்மூடும் ஒலி தெளிவாய் கேட்டது
முன் இரவு அமைதியாய் அரைஇறுதி கணக்கு பார்க்க தோன்றியது
மனவான நீலத்தில்இளம் இருள் கவ்வியது
மறதியாய் அசையா வெண் மேகங்கள்
நற்செயல்களாய் நட்சத்திரங்கள்
துர்செயல்களாய் இருள்கவ்விய கீழ்வானம்
வெளிச்சம் மட்டும் வாழ்க்கை இல்லை

அதிசியம் இரண்டு துருவங்களிலும் ஒரேமாதிரியான உயிரினங்கள்

அதிசியம் இரண்டு துருவங்களிலும் ஒரேமாதிரியான உயிரினங்கள் வடதுர்வம் ,தென்துருவம் இரண்டுக்கும் இடையே சுமார் 12000 கீமீ உள்ளது. இரண்டு துரவங்களிலும் குறைந்தது 250 வகையான உயிரினங்கள் இருக்கிறது. அதில் நீந்தும் நத்தை இரண்டு துர்வங்களிலும் காணப்படுவது பெரும் அதிசியம். இவ்வளவு தூரம் தள்ளி எப்படி நத்தை போன்றவை ஒரே மாதிரி பரிணமித்தன என்பது விந்தை. பறவைகள் , திமிங்கலம் போன்றவை ஆண்டு தோறும் இடம் பயரலாம்.ஆனால் புழுக்கள் கடல் குகும்பெர்ஸ் , நீந்தும் நத்தை போன்றவை ஒரே தோற்ற பொழிவுடன் இருப்பது அதிசயம் . கடல் நீரோட்டம் இதற்க்கு காரணமாக இருக்கலாமாம் என்கிறது .கடல் நீரோட்டம் கன்வேயோர் பெல்ட் போல் செயல்பட்டு முட்டைகளையும் லர்வாக்களையும் துருவங்களுக்கு இடையே போக்குவரத்து செய்கின்றன. http://news.bbc.co.uk/2/hi/science/nature/7888558.stm

Sunday, February 15, 2009

சின்ன குற்றங்களுக்கு இனி சிறை இல்லை

சின்ன குற்றங்களுக்கு இனி சிறை இல்லை குற்றவியல் நடை முறை திருத்த சட்டம் 2000 இன் படி , ஏழு ஆண்டு குறைவான தண்டனயினைக்கு குறைவான தண்டனயினை பெறத்தக்க குற்றங்களை செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வியலாது. மேலும் கைதிகளின் காவலை நீடிக்க அவர்களை வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தி காவல் நீடிக்க முடியும். மேலும்,கற்பழிப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் வாய்தா கிடையாது. இச்சட்ட திருத்தம் மத்ய அரசின் அரசிதழில் வெளியிட பட வேண்டி உள்ளது. வெலியிடபட்ட உடன் நடைமுறைக்கு வரும். இச்சட்ட திருத்தத்தை வழக்குஉரைஞர்கள் எதிர்க்கிறார்கள் . அவர்கள் கூறும் கராணம்:-மேற்படி சட்ட திருத்தம் இரு அவைகளிலும் சரியாக விவாதிக்க படவில்லை
காவலர்களின் கருணைன் கீழ் குற்றம் செய்தவரும் , பாதிக்கபட்டவரும் வந்து விடுவர்கள் ஒரு வாய்தா மட்டும் என்பது அவர்கள் பல வழக்குகளில் வாதிடுவது பாதிக்கும் என வழ்க்குஉரைஞர்கள் சங்க தலைவர் கூறுகிறார் . எனக்கு என்னவோ ஒரு வாய்தா என்பது சரியாக தெரிகிறது. ஆனால் சிறு சிறு குற்றவாளிகள் உடன் சிறை தண்டனை, கிடையாது என்றால் குற்றம் செய்து விட்டு ஓடி விட வாய்ப்பு உள்ளது. சின்ன குற்றத்திற்கு கைது கிடையாது என்றால் வழக்கு உரைஞர்களுக்கு சம்பாத்தியம் பாதிப்பு ஏற்படும் என்றுதான் மேற்படி திருத்தத்தை எதிர்க்கிறார்கள் என்று தோனுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

அமெரிக்க வெளியுறவு துறை திரு ஜான்கேரி தலைமையில் ஒரு குழு

காடையா ராணுவம் புதுமாத்தோளி(சரியாதெரியவில்லை) எனும் ஊரில் உள்ள முதியோர் இல்லத்தின் மீது குண்டு விசி தாக்கியதில் 75 முதியோர்கள் பலியாகிவிட்டனர். 35 முதியோர்கள் காயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் 100 வயது தாண்டிய பெரியவர் ஒரவரும் 97 வயது உடைய முதாட்டி ஒருவரும் அடங்குவர்.இதன் இடையில் அமெரிக்க வெளியுறவு துறை திரு ஜான்கேரி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைத்து சிறிலங்காவில் நடைபெறும் இன படுகொலை விசாரிக்க ஏற்பாடு செய்து உள்ளது.சென்னையில் நேற்று தமிழீல மாணவர்கள் பாதுகாப்பு குழு என்ற ஒட்டு மொத்த மாணவர் அமைப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தியது. ஊர்வல முடிவில் நமது இலங்கையில் நடக்கும் இனபடுகொலை தடுக்க வெறும் வேற்று போராட்டங்கள் மட்டும் நடத்து கிறது என விசனம் பட்டார். இலங்கை தமிழர்நல பேரவை யின் துனைத்தலைவல் ஐநா வின் படையினை இலங்கைக்கு அனுப்ப இந்தியாவின் மூலம் வேண்டுகோள் வைக்க போவதாக கூறியுள்ளது. பல்லவரத்தை சார்ந்த விஜயந்திரன் எனும் வழக்கறிஞர் சோனியா அவர்களின் உருவபொம்மையினை எரித்தற்கும் காங்கிரஸ் கொடியை எரித்தற்கும் கைது செய்யபட்டு உள்ளார்.

Friday, February 13, 2009

காதலர் தினம்

காதலர் தினம்


பூவிகாதலனை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டி
தன்னை தானே சுற்றாத நிலவே

தொட்டபேட்ட சிகரத்தில்
மேகம் வந்து இளம் இருள்
கவ்வியவேளையில்
கையுடன் கை சேர்த்த
கதகதப்பே

ஓடும் பேரூந்து பயணத்தில்
தோள் சாய்ந்து
தூங்கும் என் சொர்க்கமே

பானர்தீர்த்தில் பதுவிசாக
நீர் அருவியாக இறங்கும்
தன் பொருனையே

குற்றாலத்தில்
வேற்று உடம்பில்
ஊசி ஊசியாக
குத்தும் சாரல் மழையே

கடல் மீது கரை கோபம் கொள்ளாது
காற்றின் மீது மரம் கோபம் கொள்ளாது
சாலையின் மீது ஊர்தி கோபம் கொள்ளாது
மழையின் மீது மண் கோபம் கொள்ளாது
என் மீது நீ தொடர் கோபம் கொள்வது நியாமா
வெள்ளை ரோஜா சமாதான கொடியுடன்
உன்னை காண நாளை நான் வருவேன்
ஊடல் தீர்த்து உவகை கொள்ள செய்யடி
என் காதல் பெண்ணே

Thursday, February 12, 2009

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டன்

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டன் ஒரு திரை படத்தில் இப்படி வசனம் ஓன்று வரும். பழைய திரை படங்களிலும் முக்கண், மாயாண்டி, மாடசாமி எல்லாம் வில்லன்கள் பெயராக வரும். இப்படித்தான், எங்கள் அலுவலகத்தில் விருந்துகளில் சைவமா அசைவமா என குறிபெடுக்கும் போது நான் சைவம் என்ற உடன் சார் நீங்க சைவமா என்று வியப்பு மேலூங்க ஒரு பார்வை பார்க்கப்படும், நான் ஏன் அப்பா! கருப்பா இருந்தால் அசைவம்தானா என்று கிண்டல் செய்வேன். ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் நேற்று வங்கி பணம் வசூலிக்கும் அலுவலர் எங்கள் தெருவில் எங்க வீட்டையும் எதிர் வீட்டையும் பார்த்து கொண்டே இரண்டு மூன்று தடவை குறுக்கும் நெருக்கும் வண்டியில் சென்று ஒரு வழியாக எங்கள் வீட்டில் நின்று திரு முருகேசன் என்பவர் வீடு இதுதானே என வினவி உள்ளார் . இல்லை அப்படி யாரும் இங்கு இல்லை . என சொல்ல இல்லை மேம் , இந்த கதவு எண்ணில்வீடும் எதிர் வீட்டு கதவு எண்ணில் அலவலகம் இருப்பதாக கூறி பஜாஜ் பல்சர் வண்டி வாங்கி ஒரு தவணை கூட கட்ட வில்லை என்று சொல்லி இருக்கிறார். பிறகு மூளை போட்டு கசக்கினால் ஒரு வருடம் முன் எதிர் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒரு நபர் பெரிய பந்தா பேர்வழி கார் எல்லாம் வைத்திருந்தார். தீடீர் தீடீரென புது பைக் எல்லாம் வாங்கி பிள்ளைகளை சந்தோஷ படுத்துவர். அவர்தான் என நினைவுக்கு வந்தது. சாதரணமான நடுத்தர குடும்பம் வண்டி வாங்க சென்றால் குடும்ப அட்டை கேட்டு முகவரி விசாரித்து கடனுக்கு வண்டி விற்கும் நிறுவனங்கள் காரில் இருந்து இறங்கும் நபர்கள் என்றால் ஒன்றும் கேட்காமல் வண்டியை விற்று விடுகிறார்கள் .அதான் வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டன் என்பது போல் நடக்கிறது. இப்ப எல்லாம் வில்லன்கள் பெயர்கள் ராமச்சந்திர ராஜ் , கேசப், மேத்தா, கோலி, என ஆகிவிட்டது தெரியாமல் இன்னும் காரில் வருபவனை நம்பி கடன் கொடுத்து வசூல் ராஜாக்களை பவனி வரத்செய்துகொண்டு இருப்பவர்களை என்ன சொல்ல.

மும்பை தாக்குதல் பாக் ஒப்புதல்

மும்பை தாக்குதல் பாக் ஒப்புதல் மும்பை தாக்குதல் பாக்கில் சதி நடந்தது என்பதை பாக் ஒப்புக்கொண்டு உள்ளது. இன்றைக்கு இத்தனை பாக் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் ஒப்புக்கொண்டு உள்ளார் . ஹமத் அமீன் சாதிக் என்பவரை மேற்படி சதிக்கு உடந்தையாக நிதி அளித்ததாக கைது செய்து உள்ளனர். தொலை தொடர் கருவிகள் அளித்த ஜாவேத் இக்பால் என்பவர் ஸ்பெயினில் இருந்து உதவி உள்ளார். http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=863

குண்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள்

குண்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பிறவி குறை பாடுடன் ப்றகின்றன ஏனெனில் போலிக் ஆசிட் குறைபாடு என தெரிவித்து உள்ளது ஒரு ஆய்வு. இதய கோளாறு, ஊனம் ஆகியவற்றுடன் குழந்தை பிறக்கிறது. மேலும் மகப்பேறு சமயத்தில் உடல் எடை குறைக்கிறேன் என்று சாப்பிடாமல் இருக்கக்கூடாது. .

இருப்பு பாதையில் சென்றமகிழ்வு ஊர்தி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை ரயில்வே கேட் திறந்தவுடன் ஒரு மகிழ்வு ஊர்தி எல்லா வண்டி களையும் இடித்து தள்ளி விட்டு முன் செல்ல காவலர் விரட்ட அந்த வண்டி யாரும் எதிர் பார வண்ணம் தொடர் வண்டி பாதை பயணம் மேற்கொண்டது. காவலர் மீண்டும் விரட்ட ஒரு கி.மி வரை சென்ற பின் இருப்பு பாதையில் வண்டி விட்டு விட்டு ஓட்டுனர் ஓடி விட்டார். விசாரித்ததில் வண்டி சென்னை சேர்ந்த இட்ரவல்ஸ் க்கும் சொந்தமானது என் தெரிய வந்தது . தற்போது அவரை பிடித்து விசாரணை மேற்கொள்ள படுகிறது.