Saturday, April 4, 2009

மனசாட்சி



மழை கழுவிவிட்ட தார்சாலை

நடு வெள்ளை கோடாக

மைஇருட்டு மேனியில்

வெள்ளை கோடு போட்ட

வால்ஆட்டி குருவி ஒன்னு

ஒவ்வொரு முறையும்

சீட்டி அடித்து அதனை தொடர்நது

தன்னையே பாராட்டி இறக்கை தட்டும்

மனசாட்சி விரோதமில்லாமல்

நடப்பதாக  என்னை நானே

முதுகில் தட்டி கொள்வது போல

 

மேகம் குடை பிடித்து

ஒளிமழைத்துளி தடுத்து

மப்பும் மநதாரமான காலையில்

மனசாட்சி கேட்டது

தொடர்வண்டி படுக்கை வேண்டி

பணம் கொடுத்தது என்ன நியாயம்

 

மேக ஒட்டையின் ஊடே

புகுந்த ஒளிகற்றை போல

நடப்பு வாழ்க்கையில்

வாங்காமல் இருக்கலாம்

கொடுக்காமல் முடியாது

எதார்த்தம் சொன்னது

 

மேகம் முழுவதும் மூடி

மழை பெய்ய ஆரம்பித்தது

எல்லாருக்கும் பொதுவாக

1 comment:

சக்தி சக்திதாசன் said...

அன்பின் மதுமிதா,

மனசாட்சி அழகான கருத்துக்களை அள்ளி வீசுகிறது

அன்புடன்
சக்தி

Post a Comment