காதலர் தினம்
பூவிகாதலனை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டி
தன்னை தானே சுற்றாத நிலவே
தொட்டபேட்ட சிகரத்தில்
மேகம் வந்து இளம் இருள்
கவ்வியவேளையில்
கையுடன் கை சேர்த்த
கதகதப்பே
ஓடும் பேரூந்து பயணத்தில்
தோள் சாய்ந்து
தூங்கும் என் சொர்க்கமே
பானர்தீர்த்தில் பதுவிசாக
நீர் அருவியாக இறங்கும்
தன் பொருனையே
குற்றாலத்தில்
வேற்று உடம்பில்
ஊசி ஊசியாக
குத்தும் சாரல் மழையே
கடல் மீது கரை கோபம் கொள்ளாது
காற்றின் மீது மரம் கோபம் கொள்ளாது
சாலையின் மீது ஊர்தி கோபம் கொள்ளாது
மழையின் மீது மண் கோபம் கொள்ளாது
என் மீது நீ தொடர் கோபம் கொள்வது நியாமா
வெள்ளை ரோஜா சமாதான கொடியுடன்
உன்னை காண நாளை நான் வருவேன்
ஊடல் தீர்த்து உவகை கொள்ள செய்யடி
என் காதல் பெண்ணே
Friday, February 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வெளிப்படையா சொல்லணும்னா, கொஞ்சம் சலிப்பா இருக்குங்க.... ஆனா நல்லா முயற்சி பண்ணா அருமையான கவிதை கிடைக்கும்... அதுக்கு சில வரிகள் ரொம்ப அருமையா இருக்கு.
நிலவு, தன்னைத் தானே சுற்றுமுங்க...
////சிகர மேகத்தில் இளம் இருள் கவ்விய/////
இந்த வரிகள் பிரமாதம்...
ஆனால் ஓவரால்.... :(
Post a Comment