இருள் கவியும் முன் மாலை
கார்மேகம் கரும்போர்வை போற்ற
கடற்கூந்தலில் வெள்ளை பூச்சரமாய்
அலைகள் கரைமோதி பூ தூவும் நேரம்
மணல் அளக்கும் உன் கைபற்றி
மணமுடித்தல் பேச
கரை தொட்டு திரும்பும் அலைகளாய்
என் கையிலிருந்து நழுவியது
விடுபட்டது உன் கை
பூஇதழ் உதிரும் சத்தத்திலும் சன்னமாய்
யோசிக்க நேரம் வேண்டுமென்றாயே
அவ்வமயம் நமது காதல்
மரத்தில் கரையான் ஏறியது
அரித்து முடிக்குமுன்
உன் சிந்தனை புல்லினை நிறுத்தி
கரையான்களை தின்றுவிடு
காதலிக்கும் போதும்
உனக்கும் எனக்கும்
குடும்பம் இருந்தது
கல்யாணம் எனறால்
புது உலகத்தில் பிறந்தாற்
போல் பசப்பாதே
முழுவதும் இருள் கவியும் முன்
உள்ளத்தை சொல்லி விடு
1 comment:
//அவ்வமயம் நமது காதல்
மரத்தில் கரையான் ஏறியது
அரித்து முடிக்குமுன்
உன் சிந்தனை புல்லினை நிறுத்தி
கரையான்களை தின்றுவிடு//
கவிதை அருமை...இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...
Post a Comment