மண முறிவு தொடர்பான உச்ச நீதி மன்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பு ஒன்றில் இனி வாழ தனது இணையுடன் வாழ வியலாது எனும் காரணம் காட்டி மண முறிவு பெற வியலாது என தீர்ப்பு வழங்கியது . இதற்க்கு முன் வழங்கிய தீர்ப்பில் பிடிக்கவில்லை இணையுடன் இனி வாழ இயலாது என்றால் மண முறிவு பெற்று கொள்ள வியலும் என்று தீர்ப்புகள் வந்ததாக ஞாபகம் . ஆனால் இப்போது ஹிந்து சட்டப்படி பிரிவு 13 படி வாழ்வியலா சூழ்நிலையினை காட்டி மணமுறிவு பெற இயலாது என்றும இதற்க்கு மேற்படி சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவந்தால் தான் முடியும் என்றும் வழக்கு அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள் (நன்றி டைம்ஸ் ஒப் இந்தியா 9/3/09). மண முறிவு சட்டப்படி பெறுவது நாளது. ஆனால் பிடிக்காவிட்டால் மணமுறிவு செய்வது ரொம்ப கஷ்டம் என்றால் கட்டை பஞ்சாயத் காரர்களுக்கு கொண்டாட்டம். அவர்கள் மேற்படி மண முறிவுகளை தீர்த்து விடுதல் எனும் முறையில் செய்வார்கள். சில சமயங்களில்காவல் துறைகூட இதை செய்கிறார்கள். பிடிக்காவிட்டால் பிரிந்து போக வழி எளிதா வேண்டும். கட்டை பஞ்சாயத்துகளில் மண முறிவு செய்து கொண்டால் பின்னர் சொத்து தகராறு வர அதிக வாய்ப்பு உண்டு. எனவே தாமதம் என்றாலும் சட்டப்படி மண முறிவு பெறுவது தான் சரி. ஆனால் ரொம்ப நாளுக்கு வேண்டாதவர்களை சேர்ந்து வாழ சொல்வது அநியயாம். எனவே உடன் மண முறிவு பெற சட்ட திருத்தம் செய அரசு முன் வரவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment