Wednesday, February 25, 2009

என் மகளே

வானம்
காற்றை கொண்டு
மேகம் குலைத்து
செய்த பொம்மைகளை
உனக்காக வாங்கசென்றேன்

கரடி பொம்மையினை
எடுப்பதற்குள்
யானையாய் மாறியது
காற்றில்

கோபம் கொண்டு
வானத்தின் கன்னத்தில் அறைய
கருத்தது மேகம்
வழிந்தது மழை கண்ணீர்

காற்றும் மழையும்
நின்றதால்
உருகுலையா பொம்மை
வாங்கி
உனக்கு அளிக்க வந்தால்


உடல் பொம்மை
விட்டு விட்டு
எனை தேடி
உன் உயிர் வானுலகில்
என் மகளே

1 comment:

geevanathy said...

அருமை...
வாழ்த்துக்கள்

Post a Comment