வர வர மனைவிமக்களிடம்
அதிகாரம் வீழ்வது கண்டு
காய் அடிக்கப்பட்ட பன்னியாய்
கோபம் கொழுத்தது சண்டைக்காக
எல்லாரையும் விட்டு விட்டு
ஓடிவிட வேண்டுமென
மன நாய் சங்கிலியை
அறுத்து கொண்டிருக்கிறது
சட்டையை போட்டு கோபத்தை
முடி மறைத்ததாலும்
கோபம் திரும்புகிறது
தவறாய் போட்ட பட்டன்மீது
வெளியே செல்வது உசிதமாக
புறாக்கால்கள் பறக்கின்றன
தெரிந்தவரின் வணக்கங்கள்
தவிர்க்க தலை புதைக்கிறேன்
சாலையில் நெருப்புகோழியாய்
எங்கெங்கோ சுற்றியது
மனமாகிய உடலும்
உடலாகிய மனமும்
திருப்பங்களில் வீசிய
தென்றல் தண்மையாக்க
செக்குமாடாய் கால்கள்
வீடு புகுந்தது
இன்னொரு சுற்றுக்கு
2 comments:
சில வார்த்தைகள்..... சுளிக்க வைக்கின்றன.. கவிதை கொஞ்சம் தட்டவேண்டும்.. கரு நன்றாக இருக்கிறது!!! இன்னும் முயற்சி செய்யுங்கள்
நல்லாயிருக்கு, எழுத எழுதவே சிறக்கும். வாழ்த்துகள்.
Post a Comment