கரையை தொட வந்த அலை
பதிவு அலுவலகத்தில்
மனம் முடிக்க உனக்காக
காத்திருந்தேன்
கரையை தொட வந்த அலை
தூண்டில் வலையில் சிக்கி
கரை தொடதது போல்
எங்கோ நீ முடக்கபட்டாய்
குளத்து நீர்அலையில் சேர்ந்தாடும்
வெங்காய தாமரைகள் குளம்நீர்
குடித்து குளம் வற்ற செய்வது போல்
நீ எங்கே அடைபட்டிருக்கிறாய்
எனும் நித்தய நினைவுகள்
என் இரத்தத்தை உறிஞ்சும்
கவலைபடாதே கண்ணே
கதிரவன் கதிர் கொண்டு
உலகமெங்கும் உன்னை
தேடுவேன்
இருட்டு அறையிலும்
சிறுஒட்டை வழி புகுந்து
என் பீம்பம் காட்டுவேன்
ஒளி கற்றையாய்
உன் வாழ்வில் ஒளி சேர்ப்பேன்
Wednesday, March 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment