Monday, February 16, 2009

வெளிச்சம் மட்டும் வாழ்க்கை இல்லை

மழை சோவென பெய்து ஓய்ந்து இருந்தது
மழைத்துளிகள் கூரையின் விளிம்பில்
முத்துக்களாய் கோர்த்து நிற்கின்றன
மழை அடித்து காற்று தூயிமைஆயிற்று
தெரு வெளிச்சம் தூக்கலாக இருந்தது
தூரத்தில் லெவல் கிராசிங்மூடும் ஒலி தெளிவாய் கேட்டது
முன் இரவு அமைதியாய் அரைஇறுதி கணக்கு பார்க்க தோன்றியது
மனவான நீலத்தில்இளம் இருள் கவ்வியது
மறதியாய் அசையா வெண் மேகங்கள்
நற்செயல்களாய் நட்சத்திரங்கள்
துர்செயல்களாய் இருள்கவ்விய கீழ்வானம்
வெளிச்சம் மட்டும் வாழ்க்கை இல்லை

2 comments:

Anonymous said...

//மழைத்துளிகள் கூரையின் விளிம்பில்
முத்துக்களாய் கோர்த்து நிற்கின்றன//

நல்லா இருக்கு மதுமிதா

தலைப்பும் பொருள் தருகிறது.

நன்றி

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Post a Comment